Monday, April 17, 2023

பறிபோகும் அரசியல் அதிகார உரிமை

எம்எல்ஏக்களை விலை கொடுத்து வாங்குறது ஜனநாயகத்திற்கு எதிரானது மட்டும் இல்ல, எளியவர்களை அரசியலை விட்டு விலக்கி வைக்கும் தந்திரக்காரத்தனமும் தான்.

தேர்தல்ல போட்டியிட்டு ஜெயிக்குற மாற்று கட்சியை சேர்ந்தவங்களை பணம், அமைச்சர் பதவியை காட்டி தங்களோட கட்சியில சேர்க்குற நிகழ்வுகள்லாம் 2014க்கு அப்பறம் இந்திய ஒன்றியத்துல ரொம்பச் சாதரணமாகிட்டு.

இது ஜனநாயக மாண்புகளை குலைக்குற செயலா மட்டும் பார்க்க முடியாது. எம்எல்ஏக்களை விலைபேசி வாங்குற பிரதான கட்சிகளால, ஏனைய கட்சிகள் வேட்பாளர்களை களம் இறக்குறதுல நிறைய நெருக்கடிகளை சந்திச்சிட்டு வருது. 

ஜெயிச்சதுக்கு அப்பறம் கட்சி மாறாம இருக்கனும்னும், நம்பிக்கைக்குரிய வேட்பாளர்களாக இருக்கனுங்குறதுக்காகவும், கட்சியில் பாரம்பரியமாக இருந்து வரவங்களையும், வாரிசுகளையும் களம் இறக்க வேண்டிய கட்டாயச் சூழல்ல சிக்கியிருக்காங்க. அது மட்டுமில்லாம பணத்துக்காக மாற்று கட்சிக்கு போகாத அளவுக்கு பொருளாதாரத்துல வலுவா இருக்குறவங்களாவும் பார்த்து நிற்க வைக்க வேண்டிய நிர்பந்தத்தையும் ஏற்படுத்தியிருக்கு. இதனால கட்சிக்காரங்களாகவும், அடிமட்ட தொண்டர்களாகவும் இருக்குற எளியவர்களுக்கு அரசியல் அதிகாரம் எட்டாக்கனியா மாறுது.

ஏற்கனவே, அரசியல் அதிகாரம் கிடைக்குறதுலயும், பிரிதிநிதித்துவம் கிடைக்குறதுலயும் பின்னடைவு இருக்க சமூக காரணிகளோட, பொருளாதார காரணிகளும் சேர்ந்து எளியவர்களோட அரசியல் அதிகார உரிமையையும், கனவுகளையும் பறிச்சுக்குது.

பொருளாதாரத்துல வலுவா இருக்குறவங்களை முக்கால்வாசிக்கும் மேற்பட்டவங்க உயர்சாதியையும்/ஆதிக்க சாதியையும் சேர்ந்தவங்களா இருக்குறாங்க. அதுலையும் இது வெறும் 10-20% பேர்ட்ட தான் இருக்கு. இப்படி பொருளாதார ரீதியான நெருக்கடியை ஏற்படுத்துறது சமூக ரீதியான நெருக்கடியையும் சேர்த்தே உருவாக்குது. இதைதான் அந்த ஒரு சில கட்சிகளும் எதிர்பாக்குறாங்க.  

பல்வேறு மாநிலங்கள்ல இதுவரை ஆட்சியே அமைக்காத, அவ்வளவு ஏன் முழுசா 10 எம்எல்ஏக்களை கூட ஜெயிக்க வைக்க முடியாத தேசிய கட்சிகள் உள்ளிட்ட கட்சிகள், ஆட்சி அதிகாரத்துல இருக்கும், இருந்த கட்சிகளை மறைமுகமா தங்களுடைய நிலைபாட்டுக்கு மாத்துது. இது நேரிடையா பாசிச அரசாங்கத்தை உருவாக்காம, தேய்ந்த முதலாளித்துவத்தை நோக்கி நகர்த்தி அப்பறம் முழுசா பாசிசத்துக்கு மாத்துறதுக்கான தந்திர வே(வ)லை.


ஜனநாயகத்தை காப்பத்துறது மட்டும் இல்ல, அது மூலமா எளியவர்கள் அடைய போற அரசியல் அதிகாரத்தையும் இது மெல்ல மெல்ல தள்ளி போட்டு, அப்பறம் முழுசா தகர்த்துடும். 


தேர்தல் அரசியல்ல செலவு செய்ய வேண்டியது முக்கியமான ஒண்ணா மாறிட்டு. கொள்கையை மட்டும் கெட்டியா பிடிச்சிட்டு பொருளாதாரத்துல பின்தங்கி இருக்குற எளியவர்களை அரசியல் அதிகாரத்துல உட்கார வைக்க கட்சிகள் இப்போ பண்ணிட்டு இருக்க செலவோட கூடுதலா செலவு செய்யனும். தனிமனித பொருளாதாரத்தை உயர்த்திக்குறதுல கொள்கை பிடிப்பு கொண்டவங்க தீவிரமா இயங்கனும். கட்சி தாவல் தடை சட்டத்தை கடுமையாக்கி எளியவர்களோட அரசியல் அதிகார உரிமையை அவங்களுக்கு கிடைக்க வைக்க வேண்டியது #அரசோட கடமை.  

ஜனநாயகத்தை காக்குறதுக்கு மட்டும் இல்ல நாம அரசியல் அதிகாரத்தை அடையவும் பொருளாதாரம் மிக முக்கிய கருவி.