Saturday, March 7, 2020

போய்ட்டே இருங்க மனிதிகளே ..,

பெண்கள் மீதான பல கற்பிதங்களை , அடக்குமுறைகளை தொன்றுத்தொட்டு முன் வைத்து விட்டோம் . ஆண்டாண்டு காலமாக இங்கு ஒரு இனமே ! முழுவதுமாக அடக்கி ஆளப்பட்டுவிட்டது. 
அடக்கி வைத்த அத்துனை உணர்வுகளும் தற்போது வெளி வந்து கொண்டிருக்கிறது . அவ்வளவுதான்.  பெண்ணியம்னா இதலாமா? இப்படியா பண்ணுவாங்க, என்றெல்லாம் பேச அவசியமே இல்லை. 25 வயது வரை அப்பா, அம்மா கண்காணிப்பில் வளர்ந்த ஒரு ஆண் அதைவிட்டு வெளிய வருகையில் தனக்குள் மறைத்து வைத்த எவ்வளவோ விஷயங்களை செய்ய முற்படுகிறான் (அடியேனும் அப்படியே). குறைந்தது ஆசையாவது படுகிறோம்.  சிந்தித்து பாருங்கள், இவர்கள், நம்ம அப்பத்தா அதுக்கு அப்பத்தா அதுக்கு அப்பத்தானு எத்தனை தலைமுறையோட உணர்வுகளையும், உரிமையும் அடிச்சு ஒடுக்கி வைத்திருந்தார்கள் என்று. இத்தனையின் மொத்த வெளிப்பாடு தான், தற்போது  பலரால் உடன்பட இயலாத மனிதிகளின் அழகான அட்டூழியங்களும். ...,
சுதந்திரமாக இருக்க வேண்டும், அது கட்டுப்பாடான சுதந்திரமாகவே  இருக்க வேண்டும் என சிலர் கிளம்புவார்கள்.   அதென்ன கட்டுபாடுடைய சுதந்திரம் ? கட்டுபாடற்ற சுதந்திரம் ?
சுதந்திரம் என்றாலே விதிவிலக்கு அற்றது தானே ?  
அப்புறம் என்ன புடலங்கா வியாபாரம் எல்லாம் ?  
25 வருட தனிமனித உரிமைகளையும், உணர்வுகளையுமே கட்டுப்படுத்தி பின் வெகுண்டெழ நாம் எண்ணுகையில் , !
தலைமுறை தலைமுறையாய் அடக்கி வைத்தனவற்றை அப்பத்தாக்கள் சார்பாகவும் சேர்த்து தற்போது வெளிப்படுத்த தானே செய்வார்கள். அதில் எப்படி நாகரீகம், பண்பாடு சர்ச்சை, சண்டி பேச்சு சாம்பார்கள் எல்லாம் வருகிறது. 
பொண்டாட்டிகிட்ட அடிவாங்குறது கூட இவ்ளோ நாளா நம்ம தாத்தனுங்க செஞ்சதோட வெளிப்பாடா தான் இருக்குமோ என தோன்றலாம்.  
நிர்வாகம் பொறுப்பல்ல...
தனக்கு தெரியாமல் அல்லது தனக்கு தேவையில்லாத எந்த ஆணிகளையும் அவர்கள் புடுங்குவதேயில்லை என்பதால், வெற்று பிதற்றல்களையும், அடிமைத்தனத்தை உடைத்து வெளியே வந்ததை ஏற்றுக்கொள்ள இயலாத தியாக உள்ளங்களையும் முடிந்தவரை மாற்றிக்கொள்ள முயற்சிக்கவும், இல்லையென்றால் 
மூடிக்கொண்டு சேர்ந்து பயணிக்க பழக்கப்படுத்தி கொள்வோமாக என கூறிக்கொண்டு,

போய்ட்டே இருங்க மனிதிகளே.... வாழ்த்துகள் .... ❤🖤

No comments:

Post a Comment