Monday, June 5, 2023

NIRF ParameterSஐ விரிவுபடுத்த வேண்டும் !

கல்வி நிலையங்களை தரவரிசைப்படுத்துவதிலும் கூட Literacy rateக்கான வரையறையில் கையெழுத்து போடுவது என்ற காரணியை தொன்று தொட்டு வைத்திருப்பது போல NIRFம் அதே மாதிரியான பெட்ரோமேக்ஸ் லைட்களையே கணக்கில் கொண்டு செயல்படுகிறது.

இந்த பட்டியலை உதாசீனப்படுத்துவது நோக்கமல்ல. அதில் இன்னும் சேர்க்கப்பட வேண்டிய வரையறைகள் நிறைய இருக்கின்றன. NIRF வைத்துள்ள Parametersஐ சற்று விரிவுபடுத்த வேண்டியதும், உளவியல் காரணங்களையும் அதில் உட்புகுத்த வேண்டுமென்பதிலும் கவனமும், கராரும் காட்ட வேண்டும். 

* ESCS(Economically and socially challenged students)ன் படி மாணவர்களை கணக்கிடுவதின் படியே ஆசிரியர்களின் அளவையும் அது உறுதிபடுத்த வேண்டும். (Economically என்பதில் சிக்கல் இருக்காது, Socially என்பதில் தீர்க்கம் வேண்டும்)

*பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையை கணக்கில் கொள்வது போல, இடைநிற்றல் மற்றும் கல்வியை முழுமையாக தொடர முடியாத மாணவர்களின் எண்ணிக்கையை வைத்தும் பட்டியல் உறுதி செய்யப்பட வேண்டும்.

*மாணவர்களின் கல்வி தரத்தை மட்டுமல்ல, கல்லூரியில் அடுத்த 3,4 அல்லது 5 வருடங்கள் அவர்கள் கல்வி பயில்வதற்கான உடல் மற்றும் உள ரீதியான சூழலையும் அது உருவாக்கி தந்திருக்கிறதா என்பதையும் உறுதி செய்தே பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும்.

* கல்வி கற்கும் பெண்களின் அளவை parameterல் தனி அளவுருவாக வைத்திருப்பது போலவே திருநங்கை/திருநம்பிகளையும் parameter கொண்டிருக்க வேண்டும்.

இடைநிற்றலை காரணமாக முன் வைத்து இந்த பட்டியல் உறுதி செய்யப்பட்டால் பெரும்பாலான ஐஐடிகள் இந்த பட்டியலுக்குள் வர வாய்ப்பில்லை. கடந்த 2019ல் ThePrint ஒரு கட்டுரை வெளியிட்டது. அதில் இந்தியா முழுவதும் இருக்கும் ஐஐடிகளில் 2018&19ம் ஆண்டுகளில் 2400 மாணவர்கள் இடைநின்றுள்ளனர். அதிலும் அவர்கள் SC,ST,OBC மாணவர்கள் என கூறியிருந்தது. அதன் பிறகு இது போன்ற SURVEY வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.(கட்டுரை - முதல் COMMENTல்)

Financial resources and their utilisationல் தன்னிரைவு அடைவதும் இந்த
NIRF பட்டியலில் இடம் பிடிப்பதற்கு முக்கியதொரு காரணியாக உள்ளது. என்றாலும் தமிழ்நாடு அரசின் ஒரு சில பல்கலைக்கழகங்கள்/கல்லூரிகள் தக்க வைத்துள்ள இடங்களை விட அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்த நிதி தன்னிகர்வை அடைந்த தஞ்சாவூர் சாஸ்த்ரா சற்று கூடுதலாக தக்க வைத்துள்ளது கவனிக்க வேண்டியது. 

Parameterன் முக்கியமான காரணிகளையே புறங்கையால் handle செய்த பல்கலைக்கழங்கள்/ கல்லூரிகளை பட்டியலுக்குள் கொண்டு வந்ததே கவலை தரக்கூடிய ஒன்றாகவுள்ளது. மற்ற காரணிகளில் அவை தன்னிறைவை அடைந்திருக்கலாம். ஆனால் இரண்டு கையையும் சேர்த்து தட்டினால் தானே சத்தம் வரும்.

இதுபோன்ற பட்டியல்கள் யாருடைய வளர்ச்சியையும் ஒருபோதும் தடுத்து விடப்போவதில்லை என்றாலும், எங்களின் கையே எங்கள் கண்களின் பார்வையை பறிப்பதில் அத்துனை நியாயமில்லை.

No comments:

Post a Comment