பார்வை குறைபாடு பிரச்னையினால, வறுமை ஒழிப்பு, இறப்பு விகித அதிகரிப்பு, உணவுப்பஞ்சம் போன்ற பிரச்னைகளை சரிசெய்யுறதுல அரசுக்கு தொய்வு ஏற்பட்டுச்சு. பார்வை குறைபாடு/பார்வை இழந்தவர்களால் வருமானம் ஈட்ட முடியாத சூழல் உருவானுச்சு. வேலை கிடைக்காது, அன்றாடம் வேலை செஞ்சா தான் சோறு கிடைக்கும்னு இருந்தவங்களுக்கு சோறு கிடைக்காது. பட்டினிச் சாவு அதிகமா இருந்த அந்த காலக்கட்டத்துல பார்வை குறைபாடு அதோட வீரியத்தை அதிகப்படுத்துச்சு. கனிசமான அளவுல உணவு உற்பத்தி சார்ந்த துறையில இருந்த ஏழை எளியோரால கண் பிரச்னைகளை சரிசெய்யுற அளவுக்கான வசதியும், வாய்ப்பும் இல்லாம போயிடுச்சு.
இந்தியா முழுக்க இருந்த இந்த மக்கள் பிரச்னையை தமிழ்நாடு மட்டும் அரசோட முதன்மை பிரச்னையா பார்த்துச்சு. இதுக்காக 1972ல மறைந்த முன்னாள் முதலமைச்சர் "கலைஞரால" கொண்டு வரப்பட்டது தான் "கண்ணொளி திட்டம்".
இது மூலமா அரசு, தனியார் அமைப்புகளையும் சேர்த்து ஏழை எளியோருக்கு இழந்த பார்வையை திருப்பி கொடுக்க திட்டம் வகுத்துச்சு. தமிழ்நாட்டோட நான்கு முக்கிய நகரங்களான சென்னை, மதுரை, கோயம்புத்தூர், தஞ்சாவூர் உள்ளிட்ட இடங்கள்ல கண் மருத்துவம் சார்ந்த குழுவினரை களத்துல இறக்குனுச்சு. மாவட்டம் வாரியா அனுப்பபட்டவங்க சில கிலோ மீட்டருக்கு ஒரு ஊர்னு எங்கவாது பெரிய பள்ளிக்கூடம், கோயில் இடம்னு Camp போடுவாங்க. அதுல பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு மாத்திரை, மருந்து(Eye drops), கண்ணாடி வழங்கப்பட்டுச்சு. கண் புரை உள்ளிட்ட நோய்களுக்கு அந்த 4 முதன்மை நகரங்கள்ல கண் அறுவை சிகிச்சைகளும் செய்யப்பட்டுச்சு.
பார்வை ஒளியை மட்டுமில்ல அதனால அவங்களோட வாழ்க்கையிலயும் ஒளியை ஏத்தி வச்சாரு "கலைஞர்". இன்னைக்கு கண் புரை உள்ளிட்ட பார்வை குறைபாடுடையவர்கள் கம்மியா இருக்குறதும் தமிழ்நாட்ல தான். குறைபாடு உடையவர்களுக்கு அதிகப்படியான விலையில்லா அறுவை சிகிச்சை செய்யப்படுறதும் தமிழ்நாட்ல தான்.
சென்னை, கோயம்புத்தூர், மதுரை, தஞ்சாவூர்னு நான்கு முக்கிய இடங்கள்ல கண் தொடர்பான விலையில்லா அறுவை சிகிச்சைகள் அரசு சார்பா இன்று வரை செய்யப்படுது. முதல் நிலை நகரங்கள்ல கிடைக்குற இந்த வசதி அடுத்தடுத்த நகரங்களுக்கும் சென்றடையனும்ங்குறது தான் எல்லோருடைய எண்ணமும்.
அதை நிறைவேத்துற விதமா இப்போ முதலமைச்சர் "ஸ்டாலின்", தமிழ்நாடு முழுக்க 2ம் மற்றும் 3ம் நிலை நகரங்கள்ல 100 கண் சிகிச்சை மையங்களை அமைக்க திட்டம் வகுத்திருக்காரு. அதுக்காக #மேக்சிவிஷன் எனும் நிறுவனத்தோடு ஒப்பந்தமும் செய்யப்பட்ருக்கு. இனிமே கண் சிகிச்சைகளுக்காக முக்கிய நகரங்களை நோக்கி படையெடுக்க வேண்டிய அவசியமே இல்லை. நம்ம ஊர் பக்கத்துலயே எங்காவது ஒரு கண் சிகிச்சை மையம் இருக்கும். அங்கயே சிகிச்சை எடுத்துக்கலாம்.
திட்டம் தந்து கண்ணொளி கொடுத்த கலைஞருக்கும், ஸ்டாலினுக்கும் அவர்கள் கட்டமைத்து வைத்திருக்கும் தமிழ்நாடு அரசுக்கும் நன்றி.
No comments:
Post a Comment