NCRB அறிக்கையின் படி தமிழ்நாட்டில் 1991-2000 வரை சராசரியாக ஆண்டிற்கு 9,540 பேர் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்கள்.(உயிரிழப்புகளும் அடங்கும்). இது மொத்த இந்திய ஒன்றியத்தில் 10.11 சதவீதம்.
2001- 2010 வரை சராசரியாக ஆண்டிற்கு 13,084 பேர் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்கள். இது மொத்த இந்திய ஒன்றியத்தில் 10.96 சதவீதம்.
2011- 2020 வரை சராசரியாக ஆண்டிற்கு 15,503 பேர் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்கள். இது மொத்த இந்திய ஒன்றியத்தில் 11.43 சதவீதம்.
இந்த தற்கொலை விகிதங்களை பார்த்தால் அப்போதிருந்து இப்போது வரை எண்ணிக்கை அளவில் ஆண்டுதோறும் உயர்வு இருந்து கொண்டே தான் உள்ளது. கடந்து 30 வருடங்களை ஒப்பிடும் போது கடந்த 10 வருடங்களில் அதிகரிக்கும் எண்ணிக்கை அளவில் விகிதம் குறைந்து தான் உள்ளது.
2k கிட்ஸ் முடி வெட்ட சொன்னால், யூனிபார்ம் போட சொன்னால் , சாப்பிட சொன்னால், பள்ளி கல்லூரிக்கு சீக்கிரம் வர சொன்னால் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என 80s ம்/ 90s ம் இஷ்டத்துக்கு பேசி நகைப்பது வேடிக்கையாக உள்ளது. வீட்ல உன்னை குப்பை தொட்டில இருந்து எடுத்து வந்தோம்னு கதை விட்டதுக்குலாம் பூச்சி மருந்த தண்ணீல கலந்து குடிச்சவனுங்க தான நாமலாம். உங்களுக்கு அப்போ மிகப்பெரிய பிரச்னையா காதல் தோல்வியா இருந்ததுனா ! இப்போ உள்ளவங்களுக்கு அது வேற ஒண்ணா மாறியிருக்கு அவ்ளோதான்.
கல்வி சூழலால் ஏற்பட்ட தற்கொலை முயற்சிகளின் விகிதம் கூட 1990-2010 ஐ விட 2010-2020ல் அதிகமாக உள்ளது. அப்போ நீங்க வாழ்க்கையா நினைச்சு உசுர விட துணிஞ்சது வேற ஒண்ணு . அவன் இப்போ வாழ்கையா நினைக்குறதுல வேற ஒண்ணுக்கு முக்கியத்துவத்தை கொடுக்குறான். அதுக்காக தற்கொலை தான் வழினு சொல்லல. அவன் எதுக்காக சாகுற அளவுக்கு போறன்ங்குற உளவியல் காரணம் ரொம்ப முக்கியம். அப்போதான் சரி செய்ய முடியும். இளமை பருவத்துல உள்ள மனச்சிக்கல்களை சரிசெய்ய அரசுடன் இணைந்து நாமும் முயற்சிக்க வேண்டிய தருணங்கள் தான் இப்படிப்பட்ட தற்கொலைகள் நடக்குற சூழல்கள் எல்லாம் . அதைவிட்டு எதற்கெடுத்தாலும் தற்கொலை செய்யுறாய்ங்கனு நக்கல் செய்ய வேண்டிய அவசியம் என்ன இருக்கு.? அவனு/ளுக்கு முன்னே நீங்க காரணமா சொன்ன எல்லாத்தையும் கடந்து வரது எளிதா இருக்கு. ஆனா இதலாம் ஒரு பிரச்னையானு நீங்க இப்போ நினைக்கிற ஒண்ணு அவனை/ளை மோசமா பாதிக்குது. அப்போ அதோட தீவிரத்தை குறைக்கவும் , அறியாமையை தெளிவுப்படுத்தவும் வேண்டிய கடமை நமக்கும் இருக்கு தானே. அட அதுக்கூட வேணாம், அப்படி செய்ய முடியலனாலும் அதை ரொம்ப சாதாரணமா பார்க்க வேண்டிய அவசியமும் இல்லை தான். இப்போ மயிறு வெட்றதுலாம் பிரச்னையான தூக்கினு சுத்துற. மயிறு வெட்றதுல பிரச்னை இருக்குனு அவன்/ள் சொன்னா அதை சரிசெய்யனும், அதுதான் ஒரு அறிவு முதிர்ச்சியடைந்த சமூகம் செய்ய வேண்டியது. அதைவிட்டுட்டு தற்கொலை செஞ்சிட்டு அங்க ஒருத்தி செத்து கிடக்குறப்போ இவனுங்களுக்கு அப்படி என்ன மீம போட்டு நொட்டுறதுல இருக்குனு புரியல. அதோட அவனுங்க எட்டிகூட பாக்காத இந்த fbல போட்டு புரண்டுட்டு இருக்கானுங்க. யாருக்கு என்னத்தடா சொல்ல வறீங்க. இதுல கொடுமை என்னனா , பொறுப்புமிக்க நபர்கள் பலரும் கூட அதை செய்றது தான். அதீத வருத்தமாவும் இருக்கு.
முதல்ல 11 கழுதை வயசான நீங்க வளருங்கடா அப்பறம் வந்து அவனுங்கள வளரச் சொல்லலாம்..
என்னை பொறுத்தவரை தற்கொலைனு ஒண்ணு கிடையாது. அதுலாம் கொலை தான். அதுக்கு காரணத்தை கண்டுபிடிச்சு தண்டிக்க வேண்டியதும், சரிசெய்ய வேண்டியதும் இந்த ஒட்டுமொத்த சமூகத்தோட பெருங் கடமை தான்.
கொலை குற்றவுணர்ச்சிகளுக்கு எங்களை ஆளாக்கிடாதீங்க புள்ளைங்கள. எந்த பிரச்னைனாலும் சரி பண்ணிக்கலாம். உசுரை மாச்சிக்குறதுலாம் தீர்வு இல்ல.
No comments:
Post a Comment