Saturday, July 30, 2022

செஸ் ஒலிம்பியாட் 2022


ஒவ்வொரு சர்வதேச போட்டிகளை நடத்தும் நாடுகள் அந்த வருடம் மற்றும் அதன்பிறகான ஒன்றிரண்டு வருடங்களில் அந்நிய நேரடி முதலீடுகளை சற்று அதிகமாகவே ஈர்த்துள்ளது. அந்நிய முதலீட்டு வளர்ச்சிக்கான முழுமையான காரணங்களாக இவற்றை கருத முடியாது என்றாலும் முதலீடுகளை ஈர்ப்பதில் இவை முக்கிய பங்கு வகித்துள்ளதையும் மறுக்க முடியாது. சாதாரணமாக அந்நிய முதலீடுகளை கணக்கிடுவதில் இருந்து அந்நாடுகள், இவ்வகையான சர்வதேச போட்டிகள் முடிந்த பிறகு அந்நிய முதலீடுகளை சற்று அதிகமாகவே ஈர்த்துள்ளது. இதற்காக, இதற்குமுன் நடந்த ஒலிம்பிக் மற்றும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடந்த ஒரு சில நாடுகளின் பொருளாதார வளர்ச்சி விகிதத்தை, உலக வங்கியின் FDI Reportன் படி ஒப்பீட்டளவில் பார்த்தால் இது புரியவரும். அதன் பிறகான வீழ்ச்சிகளையும் பல நாடுகள் சந்தித்துள்ளன. ஆனால் அதற்கு உள்நாட்டு அரசியல் மற்றும் பொருளாதார மந்தநிலை உள்ளிட்ட பல்வேறு காரணிகள் காரணமாகவும் இருந்துள்ளது. தற்போது சென்னையில் நடந்து வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் அந்நிய முதலீடுகளை தமிழ்நாட்டிற்கு மட்டுமல்லாமல் இந்திய ஒன்றிய அளவிலும் ஈர்ப்பதற்கான அதிக காரணிகளை கொண்டுள்ளது. அந்நிய முதலீடுகளை இந்தியாவுடன் சமவிகித அளவில் ஈர்த்து வரும் நாடுகளை விட ஒரு புள்ளி அளவிற்காவது அடுத்த ஒன்றிரண்டு ஆண்டுகளில் நிச்சயம் முன்னேறும். அதற்கு செஸ் ஒலிம்பியாட் தவிர்க்க முடியாத காரணமாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் சுற்றுலாத்துறையில் இதுவரை இருந்து வந்த நிலையை விட சற்று அதிகமான பொருளாதார வளர்ச்சியையும் , வேலைவாய்ப்பையும் உண்டாக்கவிருக்கிறது தமிழ்நாடு சுற்றுலாத்துறை. கோவிட் பெருந்தொற்றுக்கு முன்னும் - 2021 பிற்பகுதிக்கு பின்னரும் வெளிநாட்டினரின் வருகையை மையமாக வைத்து சுற்றுலாத்துறை சார்ந்த வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும், அளிப்பதிலும் உலகளவில் இந்தியா 2வது இடத்திலும் , மாநிலங்கள் அளவில் தமிழ்நாடு மூன்றாவது இடத்திலும் உள்ளது. ஒலிம்பியாட்டுக்கு பின்னான ஒட்டுமொத்த இந்திய சுற்றுலாத்துறை சார்ந்த தரவரிசையிலும், பொருளாதாரத்திலும் நிகழும் மாற்றங்களுக்கும் , வளர்ச்சிக்கும் தமிழ்நாடு அரசும், முதலமைச்சரும் முக்கிய காரணமாக இருப்பார்கள்.

வளர்க !!

No comments:

Post a Comment