Thursday, September 29, 2022

பேசுப்பொருளாகி இருக்க வேண்டியது காண்டமா ? பாகிஸ்தானுக்கு போங்குறதா ?

பீகாரின் குழுந்தைகள் மேம்பாட்டு கழகத்தின் நிர்வாக இயக்குனரான ஹர்ஜோத் கவுர் பம்ரா IAS, பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று மாணவர்களிடம் கலந்துரையாடுகிறார். அதில் மாணவி ஒருவர் " பள்ளியில் மோசமாக உள்ள கழிப்பறை குறித்தும், அரசு பெண்களுக்கு இலவசமாக நாப்கின் வழங்குவது ?" குறித்தும் கேள்வி எழுப்புகிறார். 

அதற்கு பதிலளித்த அந்த பெண் அதிகாரி இப்போ நாப்கின் கேட்குறீங்க, அப்பறம் ஜீன்ஸ் கேட்பீங்க , அப்பறம் ஷீ கேட்பீங்க , அடுத்து காண்டம் , குடும்ப கட்டுப்பாடுனு அரசுட்டயே எல்லாத்தையும் கேட்பீங்களானு சொன்னவுடனே,

அங்க இருந்த மாணவிகள்லாம் அதுக்கு தான ஓட்டு போடுறோம்னு கத்திருக்காங்க.

உடனே அந்த அதிகாரி , இதுக்காகலாம் நீங்க ஓட்டு போட வேணாம், பாகிஸ்தானுக்கு கிளம்புங்கனு சொல்லிருக்காங்க.

இதுக்கு எதிர்ப்பு , விளக்க கடிதம்னு பிரச்னை தொடர்ந்து போயிட்டுயிருக்கு.

இங்க நாம கவனிக்க வேண்டியதும் பேச வேண்டியதும் அந்த பொண்ணோட குரலை தான். ஆனா அந்த அதிகாரி சொன்ன பாகிஸ்தானுக்கு போங்குறத தான் நாம பிரதானமா எடுத்துக்கிறோம். இங்க ஒரு கூட்டம் எதுக்கெடுத்தாலும் பாகிஸ்தானுக்கு போ, அர்பன் நக்சல், தேஷ்விரோதிஸ்னு தொடர்ந்து சொல்லிட்டே இருக்கும். ஆனா நாம அதை எதிர்க்குறதா நினைச்சிட்டு , இந்தப்பக்க உரிமையையும், தேவையையும் கேட்டுட்டு இருக்கவங்களோட குரலை இரண்டாம் பட்சமா பாக்குறோம். அது தான் பிரச்னை. அதுவும் தான் பிரச்னை. ஆனா, அதை தான் நாம உற்று  நோக்கவும், தீீீர்க்கவும் வேண்டிய பிரதான பிரச்னையா இருக்கனும்னு நான் நினைக்கிறேன். 

பாகிஸ்தானுக்கு நான் ஏன்டா போகனும் வெண்ணை மவனேனு கேட்குறதுலாம் முக்கியமானது தான். ஆனா அதைவிட முக்கியமானது, இப்போ நான் என்ன சொல்லிட்டனு நீ என்னைய பாகிஸ்தானுக்கு போக சொல்டறங்குறது. ? கேள்வி கேட்க கூடாது, தேவையை சொல்லக்கூடாது, உரிமையை வேணுங்க கூடாது. இதலாம் சொல்லிட்டா நாம நாடு கடத்தப்படனும். 

ஒண்ணு புரிஞ்சுக்கனும், அவனால நம்ம இங்கயிருந்து எங்கயும் கிளப்ப முடியாதுங்குறது நமக்கு நல்லாவே தெரியும், அப்பறம் ஏன் அதுக்கு போய் முண்டிட்டு கிடக்கனும். அவனுக்கு மக்களோட உரிமையை , தேவையை நிறைவேத்த முடியலனா அவன் வேணா இங்கிருந்து கிளம்பிக்கட்டும். நாம அந்த பொண்ணு பக்கம் நின்னு இன்னும் சத்தமா அதை கேட்போம், சொல்லுவோம். அவ்ளோதான்.. 

திரும்பி போகவும் கணவாய் இருக்கு தானே. அப்பறம் என்ன ?   

மேல அந்த அதிகாரி சொன்ன எல்லாமே அரசு கவனத்துல எடுத்து நிறைவேத்த வேண்டிய ஒண்ணுதான். அதை தமிழ்நாடு அரசு முழுசாவும், ஒரு சில மாநிலங்கள் அதில் சிலதையும் மக்களுக்கான திட்டமா செயல்படுத்திட்டு தான் இருக்கு. 

மக்களோட அடிப்படை தேவையையும், உரிமையையும் கவனிக்காத அரசும், அதோட அதிகாரிகளும் அப்படி என்னத்தை கிழிச்சு ஆற வைக்க போறாய்ங்க !?

No comments:

Post a Comment